உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உண்மையான பாசம்

0

Posted on : Wednesday, December 02, 2009 | By : ஜெயராஜன் | In :

அப்பாவுக்கு வயது 108.மகனுக்கு வயது 90.இருவரும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.அப்பா முன் கோபி.சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.
''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?''என்று தந்தை கேட்ட போது மகன் சொன்னார்,''அப்பா,இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்.நானும் பொறுத்துக் கொள்வேன்.இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை.ஐயோ,உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று எண்ணித்தான் அழுதேன்.''
---சீனக்கதை

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment